பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 யானைப் படையோடு, குதிரைப் படையோடு வர முடிய வில்லையே என்பதற்காக ஒரு படை போதாதா? இன்னொரு படை எதற்காக என்று கேட்பது, நம்முடைய போர்த் திற னையும் குறைக்கும்: நாம் ஈட்ட வேண்டிய வெற்றிக்கும் இடையூறாக ஆகிவிடும். எனவே பல முனையிலும் தாக்கிட வேண்டும். ஆனால் ஒருவர் தாக்கி, ஒருவர் தாங்குகிறார் என்றால் அப்பொழுது பேசலாம், 'நான் தாக்குகிறேன்-நீ தாங்குகிறாய், நியா யமா?' என்று. நான் கண்டிக்கிறேன்-நீ கனிவுடன் நியாயமா? என்று கேட்கலாம். பேசுகிறாய்; எல்லோரும் சேர்ந்து கண்டிப்பது இலங்கையில் நடை பெறுகிற கொடுமைகளைத்தான். இலங்கையிலே இழைக்கப் படுகின்ற அநீதிகளைத்தான் எல்லோரும் சேர்ந்து கண்டிக் கிறோம். அப்படிக் கண்டிக்கிற நேரத்திலே, அவரவர்களுக்கு இயன்ற அளவுக்குத் தங்கள் கட்சியின் பலத்தைத் திரட்டி காட்டுகிறோம். அர்த்தால் நடத்துவோம் என்றால், அதிலே ஆளுங் கட்சியும் இணைந்து கொள்கிறது என்றால், இரட்டிப்பு மகிழ்ச்சி எங்களுக்கு, எல்லோரும் சேர்ந்து நடத்துவோம். அதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மறியல் நடத்துவதோ, அல்லது இந்திரா காங்கிரஸ் கட்சி யின் சார்பில் உண்ணாவிரதம் நடத்துவதோ கூடாது என்று கூறி 150 திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் இரண்டு நாளைக்கு முன்பு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவைகளுக்கிடையிலே எட்டாம் தேதிஅர்த்தால் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நான் அதை வரவேற்கிறேன். அர்த்தாலுக்கு வரவேற்பு எட்டாம் தேதி அர்த்தாலுக்கு தமிழகத்திலே இருக் கிற ஆளும் கட்சியும் பக்கபலமாக இருக்கிறது என்பதற்காக இங்கிருந்தவாறே தமிழக முதலமைச்சர்-என்னுடைய தண்