பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 வேறென்ன செய்ய நாங்கள்? அய்யோ! வேறென்ன செய்ய நாங்கள்? அன்புள்ள, மு. க. (6-6-81 அன்று முரசொலியில் வந்த கடிதம்) ஈழத் தமிழர்கள் பிரச்சினை மனிதாபிமான பிரச்சினை “இங்கே தம்பி கோபாலசாமியும், எல். கணேசனும் எடுத்துக் காட்டியதைப் போல், திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாட்டிலே இருக்கின்ற ஐந்து கோடித் தமிழர் களுக்காக மாத்திரமல்ல; நியூயார்க்கிலே வாழ்கிற தமிழ னானாலும், சிகாகோ நகரத்திலே வாழ்கின்ற தமிழனானாலும், சிங்கப்பூரிலே வாழ்கின்ற தமிழனானாலும், ஈழத்திலே இருட் டறையிலே வேதனைப்படுகின்ற தமிழனானாலும் அவனுடைய உடலிலே தூசுபட்டால் துடித்துப் போகின்ற தமிழர் இயக் கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. முதலமைச்சர் வாய்திறக்கவில்லையே என்று கேட் டார்கள்: இன்று மாலையிலே 'மாலை முரசு' பத்திரிகையைப் படித்துப் பார்த்தேன். முதலமைச்சர் வாய் திறந்திருக் கிறார்-இலங்கைப் பிரச்சினை குறித்து என்ன தெரியுமா? இதுவா கண்டனம்? சென்னையிலே ஆதித்தனாருக்கு இரங்கல் கூட்டம் அதிலே பேசிய முதலமைச்சர் சொல்லுகிறார். ஆதித்தனார் மாத்திரம் உயிரோடு இருந்திருந்தால் இலங்கைப் பிரச்சினை யைப் பற்றி எப்படி கொட்டை எழுத்துக்களில் செய்தி வெளியிட்டிருப்பார் தெரியுமா? என்று பேசியிருக்கிறார். இவர் என்ன அதைப் பற்றிச் சொல்லுகிறார்? ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், ஆதித்தனார் உயிரோடு இருந்திருந்