பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

87

இந்த இலங்கைக் கட்டுரைகளுக்கு மங்களம்பாட வேண்டிய கட்டம் நெருங்கிவிட்டது. இவை உலகெங்கும் பெருங்கிளர்ச்சியை உண்டாக்கியிருக்கின்றன. கொரியா யுத்தம் குறுக்கிட்டிராவிட்டால். யு என். ஓ. சபையில்கூட இக்கட்டுரைகளை நிறுத்துவதுபற்றி விவாதித்திருப்பார்கள்! புது டில்லியிலுள்ள ஒரு தமிழன்பருக்கு இக்கட்டுரைகள், கவி பாடவேண்டிய அவசியத்தைக்கூட உண்டாக்கிவிட்டன. ‘அறுசீர்க்கழில் நெடில் ஆசிரியக் கலித்தொகை வெண்பா விருத்தம்’ தன்னில் ஐந்து விருத்தங்கள் அவர் பாடி அனுப்பியிருக்கிறார். அவ்விருத்தங்களில் மாதிரிக்கு இரண்டு வரிகளைக் கேளுங்கள்:—

“இடறி விழும் விஷயம் பற்றி இரண்டு

பக்கம் வரைந்துள்ளீர்கள்

இடறி விழுந்தால் இவ்வூரில்

இதைப் பற்றி எங்கும் பேச்சு!”

கட்டுரைகளை முடித்தே தீரவேண்டிய அவசியம் இப்போது தெளிவாய்ப் புலனாகிறதல்லவா? முடிப்பதற்கு முன்னால் யாழ்ப்பாணத்தில் நாங்கள் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன்.

இலங்கையில் உள்ள தமிழ்ப் பிரமுகர்களுக்குள் ஸ்ரீ க. கனகரத்தினம் என்று ஒருவர் உண்டு. இவர் இலங்கை அரசாங்கத்தில் பெரிய உத்தியோகம் வகித்தவர். சில காலத்துக்கு முன்பு உத்தியோகத்தை விட்டு விலகி அரசியலில் பிரவேசித்தார். இலங்கைப் பார்லி மெண்டில் அங்கத்தினர் ஆனார். தற்சமயம் இலங்கை

இல. 5