பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

கடவுள், உலகின் பாவங்களைத் தாங்குவதற்கு தைரியசாலிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் சுமக்கக் கொடுப்பாராம். அப்படிப்பட்ட பாவங் களைச் சுமக்கும் ஒரு பெண்ணின் கண்ணீர்க் காவியம்தான் ‘இல்லம்தோறும் இதயங்கள்’ நாவல்.

இந்நாவலைப் படிக்கும் வாசகர்கள் மனதில் ஒரு கனமான சுமையை இறக்கிவிடுகிறார் ஆசிரியர். பெண்மைக்கு துரோகமிழைக்க நினைப்பவர்களுக்கு சவுக்கடி கொடுப்பதுபோல் அவர் எழுத்து பெண்ணினத்துக்கு ஒரு பாதுகாப்புக் கேடயமாய் அமைந்துவிடுகிறது.

பெண்மைக்கு பெருமை சேர்க்கும் இந்த நல்ல நாவலை வெளியிடுவதில் கங்கை புத்தக நிலையம் பெருமை கொள்கிறது.

கங்கை புத்தக நிலையத்தார்