பக்கம்:இல்லற நெறி.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

இல்லற நெறி


தடையாகவுள்ளது. விந்து கருப்பையின் வாயிலைத் தாக்கும் பொழுதும், விந்து வெளியேறுங்கால் ஆண்குறி யோனிக் குழலில் விட்டுவிட்டுத் துடிப்பதாலும் பெண்ணின் இன்ப வுணர்ச்சி கிளர்ந்தெழுகின்றது. அந்நிலையில் ஆணும் "பேரின்பத்தை அடைகின்ருன். இந்த இன்ப உணர்ச்சி யின் எல்லையைக் காண்பதற்கு இம்முறை தடையாகவுள்ளது. தவிரவும், இன்பத்தின் கொடுமுடியை எதிர்நோக்கியிருக்கும். பெண் அக் கொடுமுடியைக் காண்பதற்குமுன் ஆண் குறி இழுக்கப்பெற்று விடுமே என்ற கவலையால் பீடிக்கப்பெறு கின்ருள். ஆணும் இன்பத்தையே மறந்து விந்து வெளிப் படும் சமயத்தில் ஆண் குறியை இழுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தால் நிரம்பப்பெற்றுள்ளான். இவ்வாறு இரு பாலாரிடையேயும் நேரிடும் ஓர் அ முக்கம், கவலை போன்ற உணர்ச்சிகள் அவர்களிடம் பல்வேறு மனக் கோளாறுகளையும் நரம்பு நோய்களையும் உண்டாக்குகின்றன என்பது உளவியல் மருத்துவர்களின் துணிபாகும்.

இம் முறையை மேற்கொள்ளும் பெண் முற்றிலும் பல வீனம்: அடைகின்ருள் பெண் அடிக்கடி திருப்தி பற்ற முறையில் கலவி புரிவதால் இடுப்பெலும்புக் கட்டினுள் தொடர்ந்தாற்போல் குருதியோட்டத்தால் உப்புதல் ஏற் பட்டு உடல் நலக் கேடும் உள்ளக் கிளர்ச்சி நலக்கேடும் உண்டாகின்றன. ஆணுக்கும் இன் பவுணர்ச்சி பலியாவது டன், விந்து வெளிப்படும் நிலையில் ஆண் குறியைச் சட் டென்று இழுப்பதால் அவனிடம் உடலதிர்ச்சி ஏற்படுகின் றது. இதல்ை அவனுடைய முதுகுத்தண்டிலுள்ள ஆண்குறி விறைக்கும் மையம்: பாதிக்கப்பெற்று அவனுடைய ஆண் மையும் குறைந்து போகின்றது. தவிரவும், புராஸ்டேட் சுரப்பியில் வீக்கமும் பெருக்கமும் ஏற்பட்டு புராஸ்டாட்டி டிஸ்' என்ற நோய் உண்டாகின்றது; இம்முறையைக்

43. Ep i sólgyið Lavafssin-Impotence 44. sj,6ữư G; ữ) sữao!p* Gỹử snuouth-Erection centre 45. புராஸ்டாட்டிடிஸ்-Prostatis

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/276&oldid=1285212" இலிருந்து மீள்விக்கப்பட்டது