குடும்பக் கட்டுப்பாடு £8s
கதிர்கள் படுமாறு செய்தால் அவை முறையே விந்தனுக் களே உற்பத்தி செய்யும் திறனையும் முட்டிையணுவை உற் பத்தி செய்யும் திறனையும் இழக்கின்றன. புதிர்க் கதிர்களின் அளவு, அவைப் படச் செய்யும் கால அளவு ஆகியவற்றைப் பொறுத்து இத்திறன் தற்காலிகமாகவோ, அன்றி திரந்தர மாகவோ இல்லாதுபோய்விடும், ஆயினும், புதிர்க் கதிர்களைக் கருத்தடைக்குப் பயன்படுத்துவதில் குறிப்பிடத்தக்க விபத் துகள் உள்ளன. இக்கதிர்கள் மிகக் கடுமையாகத் தாக்கி ஆணையோ அன்றிப் பெண்ணையோ நிரந்தர மலடாக்கிவிடு தல் கூடும். அல்லது சிறிது காலத்திற்குப் பிறகு உண்டாகும் விந்தனுக்களும் முட்டையணுக்களும் சில குறைபாடுகளு டன் உற்பத்தி செய்யப்பெற்று எதிர்கால மரபு வழியினரின்
வளர்ச்சியில் ஒரு சில நிரந்தரமான குறைகளையும் விளைவிக் கலாம்,
ஆண் விந்தணுக்களைப் பெண்ணின் இழையங்களில் குத் திப் புகுத்துவதன் மூலம் தற்காலிகமாகக் கருவுருத நிலையை உண்டாக்குவதாகக் கண்டுள்ளனர். இரஷ்யாவிலும் தென் அமெரிக்க நாடுகளிலும் இம் முறையை மானிடப் பெண் களிடம் கையாண்டுள்ளனர். இதில் பல ஆராய்ச்சிகள் நடை பெற்று வருகின்றன. இம் முறை நம்பகமானது என்று உறு திப்படுத்துவதுடன் பெண்ணிற்கோ அல்லது அவளது எதிர் காலச் சந்ததியினருக்கோ யாதொரு தீங்கும் பயவாதிருக் கின்றதா என்பதையும் அறுதியிடல் வேண்டும். எதிர்காலத் தில் ஒரு சிறு ஊசி மூலமோ அல்லது ஒரு சில மாத்திரைகளை உண்ணுதலாலோ ஒரு பென்னே ஒரு குறிப்பிட்ட கால அளவு கருத்தரியாமல் செய்விக்க முடியும் என்பது சாத்தியப் படாமற் போகாது.
மேற்கூறியவற்றில் ஒரு சரியான கருத்தடை முறையைப் பற்றிச் சிந்திக்க முடிகின்றது. கருத்தடைமுறையினுல் மனை விக் கோ அல்லது கணவனுக்கோ அல்லது அவர்களது குழந்தைகட்கோ யாதெரு தீங்கும் நேரிடக்கூடாது; அந்த முறை நம்பக்கூடியதாக இருத்தல்வேண்டும்; அது தக்க பாது
இ-19