பக்கம்:இல்லற நெறி.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

இல்லற நெறி


லேற்பட்டுள்ள தடைகளின் பல்வேறு அளவு நிலைகளை அறிந்துகொள்ளலாம். இந்தச் சோதனை கடத்த ஐம்பது ஆண்டுகட்கு முன்னரே டாக்டர் ஐ.சி. ருபின்' என்ற அறிஞ ரால் விவரிக்கப்பெற்றது. கரியமிலவாயுவிற்குப் பதிலாக ஒளிபுகாத் திரவம்: ஒன்றினேக் கருப்பையினுள்ளும் குழல் களினுள்ளும் பாயும்படிச் செய்து புதிர்க்கதிர்ப் படங்கள் எடுக்கப்பெறுகின்றன. இம்முறையினுல் கருக்குழல்களின் நிலையினை இன்னும் விரிவாக அறிந்துகொள்ளலாம். இச் சோதனைகள் குறைகளையறியப் பயன்படுவதுடன், அடை பட்டிருக்கும் குழல்களைத் திறப்பதற்கும் துணை செய் கின்றன. ஒரே கல்லில் இரு மாங்காய்களை வீழ்த்துவது போல் இவை கருத்தரியா நிலையின் காரணத்தை அறியவும், அந்நிலைக்குச் சிகிச்சையாகவும் பயன்படுகின்றன.

கருக்குழல்களில் ஏந்படும் ஏதாவதொரு வீக்கம் அவற் றில் அடைப்பினை விளைவித்து விடுகின்றது. வெள்ளை நோய், கருச்சிதைவு அல்லது கருவுயிர்ப்பு ஏற்பட்ட பிறகு நேரிடும் தொற்றுகள், இருமல் நோய் பே ன்றவை கருக்குழல்கள் வீங்குவதற்குக் காரணங்களாகும். பிறவியிலேயே உள்ள அமைப்புக் குறையும், பிறப்பு வழிகளில் ஏற்படும் உட்புற, வெளிப்புற வளர்ச்சிகளும், கவலையாலும் உள்ளக்கிளர்ச்சிக் குலைவாலும் ஏற்படும் தசைவலிப்பும் இவ்வீக்கத்திற்கு வேறு காரணங்களாகும். கருக்குழல்கள் வீங்கிய நிலையைப் படத்தில் (படம் 45) காண்க. நன்னிலையிலுள்ள கருப்பை, கருக்குழல்கள், சூற்பைகள் ஆகியவற்றை விளக்கும் படத் துடன் (படம்-50)இப்படத்தை ஒப்பிட்டுத் தெளிவுபெறுக. சில இயல்பு கடந்த கிலைகள் : குழந்தைப் பேறில்லாத தம்பதிகளிடம் உள்ள உடலியல்பற்றிய இயல்பு கடந்த நிலை களை விரிவான குறையறி ஆராச்சிகளாலும் அறுதியிட

டாக்டர் ஐ. சி. ருபின்- 5. Ri 43. Ssflugsfré Sprah-Opa ueli uid 44: Asso~ woul-Muscular spasm

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/328&oldid=1285237" இலிருந்து மீள்விக்கப்பட்டது