பக்கம்:இல்லற நெறி.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386

இல்லற நெறி


கொள்வது இயல்பிகந்த செயலன்று: அஃது அவளுக்கு அவமதிப்பைத் தருவதுமன்று. கணவன் மனைவியைத் துாண்டுவதால் அவளுடைய உணர்ச்சி கிளர்ந்தெழுவதுடன், தன்னுடைய விருப்பமும் கிளர்ந்தெழுந்து அதிகரிப்பது போலவே, பெண்ணும் கலவியில் தீவிரப் பங்கு கொள்வ தால் தன்னுடைய காம இச்சைகள் கிளர்ந்தெழுவதுடன் அவை தன் கணவனுக்குப் பேரின்பத்தைத் தருவதற்கும் காரணமாகின்றன. இவ்வுண்மை ஒவ்வொரு பெண்ணும் உளங்கொள்ளல் வேண்டும்.

மனைவியின் ஆயத்த கிலே: தம்பதிகளிடையே கள்ளமற்ற தன்மையும் உள்தடைகளின்மையும் இருக்குமாயின், அவர் கள் ஒருவர் மற்றவரின் கிளர்ந்தெழுந்த உள்ளக் கிளர்ச்சி யினை நன்கு உணர்தல் கூடும். மனைவி தான் கலவிக்கு ஆயத்தமாக இருப்பதைப் பல்வேறு முறைகளில் புலப்படுத்து கின்ருள். கணவனும் அவற்றையறிந்து அவற்றிற்குத் தக நடந்து கொள்ளுகின்ருன். மனைவியிடம் கலவியுணர்ச்சி எழும்பொழுது பெண் குறியைக் கற்றிலும் சளிபோன்ற வழு வழுப்பான திரவம் சுரக்கின்றது. இது பர்த்தோலின் சுரப்பி களினின்றும் வருகின்றது என்பதை நீ அறிவாய். புறத்தே தெரியும் பிறப்புறுப்புகள் இத் திரவத்தால் நன்கு நனையும் வரை கணவன் தன்னுடைய குறியை மனைவியின் யோனிக்ழிைல் நுழைத்தல் கூடாது. இந்தச் சுரப்பு நீர் பெண் குறி விகுதி முழுவதையும் யோனிக்குழல் வாயில யும் நன்கு நீ த்து ஆண் குறி நுழைவதற்கு வழுக்கிடு பொருளாக அமைகின்றது; பாலுணர்ச்சியும் அதிகரிக்கச் செய்கின்றது. திருமணம் முடிந்து தாம்பத்திய வாழ்க்கை தொடங்கும் ஆரம்ப நிலையில் உடல் இறுக்கங்களும் உள்ள&கிளர்ச்சிக் கவலைகளும் ஏனைய கட்டுப்பாடுகளும் இந்தப் பர்த்தோலின் சுரப்பிகள் செயற்படாது உள்தடை களை விளைவித்தல் கூடும்; இதனால் உடனே ஈரம் தோன்று வதில்லை. இந்நிலை ஏற்பட்டால், செயற்கை முறையாக யாதாவது ஒரு வழுக்கிடு பொருளைப் பயன்படுத்துவது நன்று. பொதுமையும் அன்னியோன்யமும் இருந்தால் இஃது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/392&oldid=1285264" இலிருந்து மீள்விக்கப்பட்டது