தகடூர் யாத்திரை மூலமும் உரையும்
“அறம்நனி சிறக்க அல்லது கெடுக”
66
'அரசு முறைசெய்க களவில் லாகுக்
“நன்றுபெரிது சிறக்க தீதில் லாகுக்” “மாரி வாய்க்க வளநனி சிறக்க”
99
என ஐங்குறு நூற்று வேட்கைப் பத்து விளக்கும்.
யாப்பமைதி:
85
(7)
(8)
(9)
(10)
இப்பாடலின் அடிபலவும் அந்தாதியாகி அழகுபெற
நின்றன. இதனைச் செந்நடைச் சீரந்தாதி என்பார் யாப்பருங்கல விருத்தியுடையார். அவர் தரும் பாட்டு வருமாறு:
66
"முந்நீர் ஈன்ற அந்நீர் இப்பி;
இப்பி ஈன்ற இயங்குகதிர் நித்திலம்; நித்திலம் பயந்த நேர்மணல் எக்கர்; எக்கர் இட்ட எறிமீன் உணங்கல்; உணங்கல் கவரும் ஒய்தாள் அன்னம்; அன்னம் காக்கும் நன்னுதல் மகளிர்; மகளிர் கொய்த மயங்குகொடி அடம்பி அடம்பி அயலது நெடும்பூந் தாழை; தாழை அயலது வீழ்குலைக் கண்டல்; கண்டல் அயலது முண்டகக் கானல்; கானல் அயலது காமரு நெடுங்கழி; நெடுங்கழி அயலது நெருங்குகுடிப் பாக்கம்; பாக்கத் தோளே பூக்கமழ் ஓதி; பூக்கமழ் ஓதியைப் புணர்குவை யாயின் இடவ குடவ தடவ ஞாழலும்
இணர துணர்புணர் புன்னையும் கண்டலும்
கெழீஇய கானலஞ் சேர்ப்பனை இன்றித் தீரா நோயினள் நடுங்கி
வாராள் அம்ம வருந்துயர் பெரிதே
- யா. வி. 52 மேற்.