118
―
இளங்குமரனார் தமிழ்வளம் 12
குறி பெற்றான். அது செயற்கருஞ் செயல் ஆகலின் ஆசிரியர் தொல்காப்பியனார் அதனைப் 'பெருமை பெருமை' என ஆண்டார். ஐயனாரிதனார் ஒரு தனி நிலை என்றார்.
“வருவிசைப் புனலைக் கற்சிலை போல
ஒருவன் தாங்கிய பெருமை’
""
“பொருபடையுட் கற்சிறைபோன்(று)
ஒருவன் தாங்கிய நிலையுரைத்தன்று"
- தொல். புறத். 8.
―
பு. வெ. 54. ஒருதனி நிலை
தான் நடுங்காமையும், பிறரை நடுக்குதலும் நிகழும் ஆகலின் நடுங்காது நிற்பவற்கு” என்றார். ஊக்கமுடைமையில்,
66
சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பின் பட்டுப்பா டூன்றும் களிறு
99
—
திருக். 597
என்று பொய்யாமொழி கூறுவது பொருத்தி நோக்கத்தக்கது. கடல்போல் படைப்பெருக்குவரினும் தானொருவனே நின்று தன்னாற்றலே துணையாக வென்றி கொள்வோனைக் “கடற்கு ஆழி” அனையன் என்பர் மதுரைக் கணக்காயனார். அவர் பாட்டு இத் தகடூர் யாத்திரைக்கு விளக்கம் போல்வதாதல் காண்க:
22.
“வேந்துடைத் தானை முனைகெட நெரிதர ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித் தன்னிறந்து வாராமை விலக்கலிற் பெருங்கடற் (கு)
ஆழி அனையன் மாதோ; என்றும்
பாடிச் சென்றோர்க் கன்றியும் வாரிப்
புரவிற் காற்றாச் சீறூர்த்
தொன்மை சுட்டிய வன்மை யோனே’
புறம். 330 (21)
5
13 . படைச் செருக்கு - 5
.
நேரிசை வெண்பா
பிறந்த பொழுதேயும் பெய்தண்டார் மன்னர்க் குடம்பு கொடுத்தாரே மூத்தார் - உடம்பொடு முற்றுழிக் கண்ணும் இளையரே தம்கோமாற் குற்றுழிச் சாவா தவர்.
புறத். 1318