4.
58
இளங்குமரனார் தமிழ்வளம்
3. செங்கோன்மை - 2
இன்னிசை வெண்பா
அறம்புரிந்தன் றம்ம அரசிற் பிறத்தல் துறந்த தொடர்பொடு துன்னிய கேண்மை சிறந்தார்க்கும் பாடு செயலீயார் தத்தம் பிறந்தவேல் வென்றிப் பொருட்டு.
―
12
—
புறத். 667.
(இ-ள்) தாம் தாம் பிறந்த குடியின் போர் வெற்றியின் பொருட்டாகத் துறவியாம் தன்மையொடு, மிக நெருங்கிய உறவினால் சிறந்தவர்க்கும் தாம் செய்யத் தக்க கடப்பாடுகளைச் செய்தற்கு இயலார் ஆகலின், அரசர் குடியில் பிறத்தல் என்பது அறம் புரிந்ததன் பயன் என்பதன்று என்றவாறு.
உரிமைக்
இ -து:- "செல்வ வாய்ப்பும், ஏவல்கொள்ளும் உரிமையும், இணையில்லா இசைமையும் உடையது ஆளும் குடியில் பிறப்பது” என்று உலகோர் மதிப்பாராக, “அஃதின்று; அரச குடியிற் பிறப்பது அல்லல் மிக்கது” என்பதை அறுதியிட்டுக் காட்டுவது இப் பாட்டு.
L
(வி - ரை) அம்ம - இடைச் சொல். இரக்கப் பொருள் தந்து இவண் நின்றது.
பல்வகை வாய்ப்புக்களும், வளங்களும் பாங்குற அமைந்து கிடக்கப் பெற்றவன் அரசன்; ஆயினும் அவன் பற்றற்றவனாக வாழுதல் வேண்டும்.
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுக வேண்டியவன் வேந்தன்; ஆயினும் அவன் அச் சுற்றத்திற்கெனத் தான் விரும்பும் உதவி களையெல்லாம் செய்தற்குக் கூடாதவன்.
ஒப்பநாடி அத்தகவு ஒறுக்க வேண்டியவன் மன்னன்; ஆயினும் பொதுநோக்கு ஒழிந்து தகுதியறிந்து தக்கோரைப் போற்றிக் கொள்ளத்தக்கவன். ஆக ஒன்றற்கு ஒன்று முரண்பாடு கொண்ட தன்மைகளை முறை திறம்பாவண்ணம் பேணிக் காக்க வேண்டியவன் காவலன் ஆகலின்,
66
ள
அரசில் பிறத்தல் அறம்புரிந் தன்று”
என்றார். அதற்காக ‘அம்ம!' என இரங்கினார்.
பாண்டியன் நெடுஞ்செழியன் தான் தவறு செய்ததாக உணர்ந்ததும் அரியணையில் இருந்து வீழ்ந்து உயிர்துறந்த