பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

66

யாப்பருங்கலம்

(குறள் வெண்பா)

அளவறியான் நட்டவன் கேண்மையே கீழ்நீர்த் 'தறியறியான் பாய்ந்தாடி அற்று

எனவும்

யைபு.

187

வை முதற்சீர்க்கடை ஒத்து வந்தமையால், கடை

(நேரிசை ஆசிரியப்பா)

"தொடுகடற் றுறைதுறை திரிதரும் 2சுறாஅ;

கருங்கழி கலந்து கலிதரும் `கராஅ;

மறிதிரை மகரமும் 4வழாஅ;

எறிநீர்ச் சேர்ப்ப ! இந் நெறிவரத் 'தகாஅ

இஃது அடிதோறும் கடைச்சீர்கண் அளபே தொடுத்து வந்தமையால், கடை அளபெடை. பிறவும் அன்ன.

அடி இயைபுத்தொடை

ச0. இறுவாய் ஒப்பினஃதியைபெனப் படுமே.

(எ)

இஃது என் நுதலிற்றோ?' எனின், நிறுத்த முறையானே அடி இயைபுத்தொடை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ.ள்) அடிதோறும் இறுதிக்கண்

எழுத்தானும், சொல்லானும் ஒன்றிவரின், அஃது ‘அடி இயைபுத்தொடை எனப்படும் என்றவாறு.

வரலாறு :

(நேரிசை ஆசிரியப்பா)

“மாயோள் கூந்தற் குரலும் நல்ல ;

கூந்தலில் வேய்ந்த மலரும் நல்ல;

மலரேர் உண்கணும் நல்ல;

6

பலர்புகழ் ஓதியும் நனிநல் லவ்வே'

எனவும்,

66

(நேரிசை ஆசிரியப்பா)

"இன்னகைத் துவர்வாய்க் கிளவியும் அணங்கே;

நன்மா மேனிச் சுணங்குமார் அணங்கே;

ஆடமைத் தோளி ஊடலும் அணங்கே;

7

அரிமதர் மழைக்கணும் அணங்கே;

திருநுதற் பொறித்த திலதமும் அணங்கே;

யா. வி. 53. மேற்.

யா. கா. 18. மேற்.

18.மேற்

1. ஆப்பு, தூண். 2. ஒருவகை மீன். 3. முதலை. 4. தவறா. 5. தகாது 6. கூந்தல். 7. செவ்வரி. (பா. வே) கூந்தற் பெய்த* கூடலும்.