பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

பிணிநலம் பிரிவெய்திப் பெருந்தடந்தோள் வனப்பழிய அணிநலம் தனியேவந் தருளுவதும் அருளாமோ? “அன்பினால் 1அமிழ்தளைஇ அறிவினாற் பிறிதின்றிப் பொன்புனை பூணாகம் பசப்பெய்தப் பொழிலிடத்துப் பெருவரைத்தோள் அருளுதற் கிருளிடைத் 'தமியையாய்க் கருவரைத்தோள் கதிர்ப்பிக்கும் காதலும் காதலோ?

“பாங்கனையே வாயிலாப் பலகாலும் வந்தொழுகும் தேங்காத கரவினையும் தெளியாத இருளிடைக்கட்

குடவரைவேய்த் தோளிணைகள் குளிர்ப்பிப்பான் தமியையாய்த் தடவரைத்தார் அருளுநின் தகுதியும் தகுதியோ?

வை தாழிசை.

“தாதுறு முறிசெறி தடமலர் இடையிடை

தழலென விரவின பொழில்;

“போதுறு நறுவிரை புதுமலர் தெரிதரு

கருநெய்தல் விரிவன கழி;

“தீதுறு திறமறு கெனநனி முனமுனம் துணையொடு பிணைவன துறை;

"மூதுறும் ஒலிகலி நுரைதரு திரையொடு கழிதொடர் புடையது கடல்.

வை நான்கும் அராகம்.

"கொடுந்திறல் உடையன சுறவேறு கொட்பதனால் இடுங்கழி இரவருதல் வேண்டாவென் றிசைத்திலமோ? “கருநிறத் “தெறுதொழிற் கராம்பெரி துடைமையால் இருணிறத் தொருகானல் இரவாரல் என்றிலமோ?

இவை நாற்சீர் ஈரடி இரண்டம்போ தரங்கம். “நாணொடு கழிந்தன்றால் பெண்ணரசி நலத்தகையே; “துஞ்சலும் ஒழிந்தன்றால் தொடித்தோளி தடங்கண்ணே; “அரற்றொடு கழிந்தன்றால் ஆரிருளெம் ஆயிழைக்கே; “நயப்பொடு கழிந்தன்றால் நனவதுவும் நன்னுதற்கே.

இவை நாற்சீர் ஓரடி நான்கு அம்போ தரங்கம்.

1. அமுது கலந்து. 2. அணிபூண்டமார்பு. 3. தனிமையனாக. 4. கொல்லும் முதலை.