130
இளங்குமரனார் தமிழ் வளம் - 20
28. மருத்துவர் வீட்டில் மாறாநோய்
"மருத்துவருக்கும் நோய்; மருத்துவர் வீட்டா ருக்கும் நோய்; இவ்வாறிருக்க அந்த மருத்துவர் ஊரார் நோயைப் போக்குவது எப்படி?"- இவ்வாறு புள்ளிருக்கும் வேளூர்ப் பெருமானை வினவுகிறார் காளமேகப் புலவர்.
ய
புள்ளிருக்கும் வேளூர் இறைவன் பெயர் வைத்திய நாதர் என்பது; வைத்திய நாதராகிய அவருக்கு வாதக் கால்; மைத்துனராகிய திருமாலுக்கு நீரிழிவு; பிள்ளை யாம் விநாயகருக்குப் பெருவயிறு; இந்த வினை தீர்க்க இயலாத இவர் எந்த வினை தீர்ப்பார்? எனக் கேட்கின்றார் புலவர்.
வாதநோய் உடையவர் அந்நோய் வலியால் ஒவ் வொரு வேளை தம் காலைத் தூக்கிக் கொண்டிருப்பர். இவரோ நடராசர்; ஆதலால் கால் தூக்கி ஆடும் இவர் வாதக் காலராம்.
திருமால் நீரில் (கடலில்) படுத்திருப்பவர்; ஆதலால் அவர்க்கு நீரிழிவாம்.
பிள்ளையார் வயிறு மத்தள வயிறு ஆதலால் வயிறு வீங்கு நோய் உடையவராம்! எள்ளுதலால் எத்தனை இன்பச் சுவை!
66
'வாதக்கா லாந்தமக்கு; மைத்துனர்க்கு நீரிழிவாம்;
பேதப் பெருவயிறாம் பிள்ளைதனக்(கு); - ஓதக்கேள்
-
வந்தவினை தீர்க்க வகையறியா வேளூரார்
எந்தவினை தீர்ப்பார் இவர்?"
பேதம்-மாறுபாடு. ஒதக் கேள்-சொல்லக்கேள். வேளூர் -புள்ளிருக்கும் வேளூர்
(வைத்தீசுவரன் கோயில்)