70
இளங்குமரனார் தமிழ்வளம் - 24
ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் எம்.ஏ. பட்டமும்;
சட்டக் கலையில் எம்.எல்., பட்டமும்;
1920-ல் குற்றங்களின் நெறிமுறைகள்
(Principles of Criminology) என்னும்
நூலியற்றிப் பதினாயிரம் ரூபாய் பரிசுடன் தாகூர்ச் சட்ட விரிவுரையாளர் பட்டமும் பெற்று
1919முதல் 1927 வரையில் சென்னைச்
சட்டக் கல்லூரியில் பேராசிரியராகவும் 1929-1930, 1940-1944 இவ் ஐந்தாண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்
தமிழ்ப் பேராசிரியராகவும் விளங்கி; 1926-1932-ல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக
ஆட்சிக் குழு உறுப்பினராகவும்;
1932 முதல் 1937 வரை நெல்லை
நகராட்சி மன்ற உறுப்பினராகவும்; நெல்லை
யப்பர் கோவில் அறங்காப்பாளராகவும்; அமர்ந்து சீர்திருத்தங்கள் பல செய்து;
மணிவாசக மன்றம் நிறுவி, மணிமாலை என்னும் தாளின்வழிப் பல கலை நூல்களை இயற்றி வெளியிட்டு
நூலாராய்ச்சியுடன் நால்வர் வரலாறுகள்
சேக்கிழார்,பட்டினத்தார், தாயுமானவர்,
குமர குருபரர், சிவஞான முனிவர், மெய்கண்டார் வரலாறுகள்;
திருக்குறள் திருவாசகப் பொழிப்புரைகள்;
தமிழிலக்கிய வரலாறு; தமிழர் சமயம்,
வானநூல், மெய்கண்ட நூல்களின் உரைநடை,