பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

"திருவரங்கம், தமிழர்அங்கம் துடிது டிக்கச் சீரியற்கை யாம்அரங்கம் சேர்ந்திட் டாரோ! பெருவரங்கம் தமிழ்க்கென்று பேசு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நாடி வருவர்அங்கம் என்படுமோ? வையம் வாடி வண்தமிழ்நா டுற்றமறை மலைஎம் அண்ணல் ஒருவர்அங்கம் தம்மருகர்க்காக நொந்தால்

உயர்தனிச்செந் தமிழணங்கும் உயிர்நை வாளே

109

என்பது முதலாகப் பாவேந்தர் ஓர் ‘ஐந்தகம்’ (பஞ்சகம்)) பாடி நைந்தகம் நலிந்தாரெனின் மற்றைப் பாவலர் மறுக்கத்தை உரைக்கவும் வேண்டுமோ? இரங்கல் உரைகளையும், இரங்கல் பாக்களையும் இணைப்பில் கண்டு கொள்க என்று இங்கமைவாம்.

6