பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஓ கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

33

இலண்டன் மாநகரத் தேர்வின் தேர்ச்சி முடிவு வந்தது. அதில் வெற்றி பெற்றார் வ.சு. அடுத்த முயற்சி என்ன? சென்னை மருத்துவக் கல்லூரியில்சேர்ந்து பயில முயற்சி மேற்கொண்டார். 1918 ஆம் ஆண்டு சூன் திங்கள் பல்லாவரத்திற்குச் சென்று அடிகளார் வளமனையில் தங்கிக்கொண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர முயன்றார். அம் முயற்சி வெற்றிதராமையால் மீண்டும் பாளையங்கோட்டைக்குத் திரும்பினார்.

படிப்பார்வம் இடையீடு இன்றி உந்தியாமையால் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் சேர்ந்து, இரண்டாண்டுகள் பயின்றார். அவ்வளவில் கல்லூரிக் கல்வி முற்றுப்பெற்றது. ஆனால் தாமே கற்கும் கல்விக்குக் கால எல்லை உண்டோ? 'அறிதோறு அறியாமை கண்டற்று' என்னும் வள்ளுவர்வாக்குக்கு ஏற்பத்துறைதோறும் புத்தறிவைப் பெருக்கிக் கொள்ளலானார்.