பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

அந் நாளில் அரங்கர் செய்த வழிகாட்டுதல் - அவர் ஓதாது கற்றவற்றை உடனிருந்து ஓதி ஓதி இளவல் வ. சு. உணர்ந்த பேற்றால், நாடு பெற்ற நலம் ஏடுமணக்க எழுதத் தக்கதாம். ஆதலால் தான் அண்ணனும் தம்பியுமாகிய இவர்களை நெடுங்காலம் அறிந்து நேரில் பழகி அறிந்தவர்கள் "தமது தொண்டு விளங்குதற்கான தம்பியைப் பெற்ற பேறு இவருக்கே வாய்த்தது” என்று உளமாரப் பாராட்டுவாராயினர். “எம்பியை ஈங்குப் பெற்றேன் என்னெனக்கரிய தென்றான்" என்னும் வாக்கைக் கட்டிக் காக்கப் பிறந்த உடன்பிறந்தார் அரங்கரும் வ.சு.வும் என்பதில் ஐயமில்லையாம்.