பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

200

கற்பெனும் மனத் திண்மையில்தான்

ஆண்பெண் உறவும் நிலைத்து நிற்கும்.

வாய்மை யாதொன்றும் தீமையிலாத சொலல்

அரிச்சந்திரனின் உண்மையும்

நடைமுறை நோக்கு

தசரதனின் வாய்மையும்

சிறப்பாகச் சொல்லப்பட்டன

ன்

'கண்டொன்று சொல்லேல்'

என்பதும் ஏற்கப்பட்டது

உண்மை என்பது நெருப்புப் போன்றது.

அது சட்டத்திற்கே பயன்படும்.

வாழ்க்கைக்குப் பயன் படாது என்ற

மன அழுத்தம் விளைந்தது.

திருவள்ளுவரின் நோக்கு

யாருக்கும் எவ்விடத்தும்

சிறு தீங்கும் தராத சொல்லைச்

சொல்லுதலே வாய்மை

(உண்மை பேசுதல்) எனப்படும்.

இதுவே மனத் தூய்மைக்கும்

அவா இன்மைக்கும் அடிப்படை.

குற்றமற்ற நன்மையைத்

தருமானால் பொய் கூட

வாய்மை ஆகலாம்.

1-10-87

(1-10-87)