பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

கண்

இளங்குமரனார் தமிழ்வளம் 31

திருச்சுற்றுக்களைக் கடந்து வரும் இக்கோபுரவாயில் மண்டபம் பேச்சக்கால் மண்டபம்; இதனைக் கடந்து கிழக்கே இருப்பது வீரவசந்தராயர் மண்டபம். இதில் நாற்பத்தாறு தூண்கள் உள்ளன. இதனைக் கட்டியவர் முத்துவீரப்ப நாயக்கர் என்பவர். இவர், திருமலை நாயக்கரின் தமையனார். இதனைக் கி.பி. 1611 இல் கட்டினார். இங்கு இப்பொழுது பல

வகைக் கடைகள் உள்ளன.

அம்மன் திருவாயிலில் உள்ளபடியே இதன் வாயிலில் உயர்ந்த திருவாச்சி உள்ளதே.

பொன் : ஆம்! அதனைச் செய்த மருது வீரர்கள்தாம் இதனை யும் செய்தனர். இப்பொழுது சிவகங்கைத் திருக் கோயில் ஆட்சியினரே விளக்கேற்றி வருகின்றனர்! அதேபோல் இதுவும் 1008 விளக்குகள் உடையதே!

கண்

அம்மைக்குச் செய்ததை அப்பனுக்கும் செய்தது தானே சரி.

பொன் : கண்ணப்பா! இது, புகழ் மிக்க ஆயிரக்கால் மண்ட பமாகும்!