இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
94
கண்
—
இளங்குமரனார் தமிழ்வளம் 31
திருச்சுற்றுக்களைக் கடந்து வரும் இக்கோபுரவாயில் மண்டபம் பேச்சக்கால் மண்டபம்; இதனைக் கடந்து கிழக்கே இருப்பது வீரவசந்தராயர் மண்டபம். இதில் நாற்பத்தாறு தூண்கள் உள்ளன. இதனைக் கட்டியவர் முத்துவீரப்ப நாயக்கர் என்பவர். இவர், திருமலை நாயக்கரின் தமையனார். இதனைக் கி.பி. 1611 இல் கட்டினார். இங்கு இப்பொழுது பல
வகைக் கடைகள் உள்ளன.
- அம்மன் திருவாயிலில் உள்ளபடியே இதன் வாயிலில் உயர்ந்த திருவாச்சி உள்ளதே.
பொன் : ஆம்! அதனைச் செய்த மருது வீரர்கள்தாம் இதனை யும் செய்தனர். இப்பொழுது சிவகங்கைத் திருக் கோயில் ஆட்சியினரே விளக்கேற்றி வருகின்றனர்! அதேபோல் இதுவும் 1008 விளக்குகள் உடையதே!
கண்
- அம்மைக்குச் செய்ததை அப்பனுக்கும் செய்தது தானே சரி.
பொன் : கண்ணப்பா! இது, புகழ் மிக்க ஆயிரக்கால் மண்ட பமாகும்!