கண்
மதுரைக் கோயில் வரலாறு
97
சிற்பி, தூணின் மேற்குப் பக்கத்தில் அவர் திகைப்புடன் இருப்பதைக் காட்டுதலால் விளக்குகிறான்.
- சிவகோசரியார் முகத்தில் வியப்புடன் கூடிய கவலை குடி கொண்டுள்ளது. அவர் முகத்திற்கு இளந்தாடி அழகு செய்கின்றது! இது குறிஞ்சி நிலம் என்பதற்காக யானை காட்டப்பட்டுள்ளது.
பொன் : சரி, இவரைப் பார். இவரும் முக்கண்மூர்த்தியே ஆவ.. நாற்கை நம்பியாகத் திகழும் இவரின் காலின் கீழே மிதிபட்டுக் கிடப்பவனைப் பார்!
கண்
- மிதிபடுபவன்
கிடக்கும் அலங்கோலத்தையும்
மிதியின் அழுத்தத்தையும் மறந்து - ஏன் மிதிப்புக் கொடுமையைக் கூட நினையாமல் -வியப்போடு நம்மைப் பார்க்க வைப்பது கலையின் சிறப்புத்தானே! பொன் : ஆணவத்தை அரன் அலற அலற மிதிப்பது இது. நெஞ்சில் வலக்கால் மிதியை வாங்கித் தலை கீழே பட்டும் நிமிர்ந்து மேலே பார்க்கிறான் ஆணவன்; விழி பிதுங்கத் திணறுதலுடன் பார்க்கிறான்; அவன் கால் வளைந்து தலைக்குக் கீழே கிடப்பது தூணின் கீழ் பக்கத்தை வளைத்துக் கொண்டது. கேடயக்கை மேல் பக்கத்தைப் பற்றிக் கொண்டது; இவன் பெருவிரலையும் அதிலுள்ள நகத்தையும் பார்!
கண்
கண்
- இந்த நகத்தால் இவன் கிழிக்கத் தொடங்கினால் நரசிங்கம் கிழித்த கிழிப்புத்தான்! ஆணவத்தை எவ்வளவு செம்மையாக மிதித்தாலும் மிதிகொஞ்சம் தளர்ந்தால் தலையெடுத்து மேலே பார்க்கும்! கீறும்; கிழிக்கும்! 'எண்ணிக் கொள்க' எனச் சொல்லில் காட்டாமல் கல்லில் காட்டியுள்ளான் கலைஞன்! நாம், 'நான் எனது என்னும் செருக்கு அறுப்போம்! அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுப்போம்" என உறுதி கொள்வோம்.
பொன் : இந்த ஆணவனை 'முயலகன்' என நினைக்கிறாயா? : ஆம். அப்படித்தான் நினைத்தேன். உற்றுப் பார்த்தால் அவனல்லன். இவன் போரிட வந்தவன்போல் அல்லவா இருக்கிறான்!