பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்

மதுரைக் கோயில் வரலாறு

117

அக் கல்வெட்டு இருக்கும் பகுதியிலேயே போட்டு வைத்தால் வரலாற்றை ஆய்பவர்களுக்கும் அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் துணையாம்!

64

ஆம்! நம்மவர் சொத்து பழஞ் சொத்து; பாரறியாப் பழஞ் சொத்து. அதனை நாம் அறியாமையாலும் அயர்வாலும் அழியவிடுவது இழிவேயாம். நேற்று நாகரிக ஏற்றம் பெற்றவர்களும் எப்படி வாண வேடிக்கை" விடுகின்றனர்! இல்லாப் பெருமையைச் சொல்வது இழிவு! அதனினும் இழிவு உண்மைப் பெருமையை உணர்ந்துகொள்ளாமல் இருப்பது. இனி இக்கோயில் திருப்பணி செய்பவர்களாவது இதனைக் கருதலாம்; தொல்பொருள் ஆய்வுத் துறையாவது கருதலாம்; ஏன் கோயில் நிர்வாகமே கருதலாமே!