பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

இளங்குமரனார் தமிழ்வளம் - 31 31ஓ

தெளிவு ஏற்பட்டது. அதை நாமும் பின்னே பேசிக் கொள்ளலாம்! அம்மை கோயிலின் முகப்பு மண்டபம் இது. இதனை 'அட்ட சத்தி மண்டபம்' என்று கூறுவர். 'அட்ட லக்குமி மண்டபம்’ என்பதும் உண்டு!" என்றான் பொன்னப்பன்.

பசித்தவனுக்கு பாலமுது கிடைத்தால்போல விழித்தகண் மூடாமல் விரும்பிப் பார்த்தான் கண்ணப்பன். கண் பெற்ற பயனைக் கண்டடைந்ததாகக் களித்தான். ஆர்வத்தோடு பார்ப்பவனைத் திசை திருப்பக்கூடாது என அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் பொன்னப்பன்! ஒரு பெரு மூச்சுவிட்டு, அந்த மண்டப அழகையெல்லாம் பருகியவன் போல அமைந்த பின்னரே, பொன்னப்பன் பேசத் தொடங்கினான்.