பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

இளங்குமரனார் தமிழ்வளம் 31 ஓ

திருக்கிறது! அத்தனையும் பச்சைப் பசுங்கொடி வடிவங்களே!

பொன் : அரைவட்ட வடிவத்தில் வளைவான முகடமைந்த இம்மண்டபத்தின் நீளம் 13.8 மீட்டர்; அகலம் 7.2 மீ. இது முன்னாளில், வெளியூர்களில் இருந்து திருக்கோயில் வழிபாட்டுக்கு வருவார்க்கு உணவு படைக்கும் இடமாக இருந்தது. இப்பொழுது இறைவனுக்கும் இறைவிக்கும் படைப்பதற்குரிய தேங்காய் பழம் முதலியன விற்கும் கடைகளை இருபாலும் கொண்டுள்ளது.

கண்

சோற்றுக் கடைகள் இல்லாத காலத்தில் அறச் சோற்று நிலையமாக இவ்விடம் இருந்தது சரிதான். இந்தக் காலத்திற்கு இந்நிலை சரிதான். காலத்திற்குத் தக்க சூழல் அமைவது இயற்கைதானே!

பொன் : நான்குபேர் போனவழி நல்லவழி என்பார்களே அந்த நாலுபேரும் 'மேல்நிலை'யிலே நிற்பதைப் பார்த் தாயா? அவர்கள் நிலை மேல்நிலைதான்! ஊனுருகி நின்று தேனொழுகத் தேவார, திருவாசகம் பாடிய திருவாளர் நால்வரும் எந்நாளும் இங்கே இருந்து இசைத்துக் கொண்டிருக்கச் செய்த இந்த ஏற்பாடு மிக நல்லதுதான். இந்த மண்டபத்திலேயே நெடும்பொழுது ஆகிவிட்டது. மேலே போகலாம்.