பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

53

உன் அருட்பார்வைக்கு ஆளாகி ஆனந்த வெள்ளத் தில் மூழ்கினாரே நின்னருட் செல்வம் குமரகுருபரர், அவர் திருவாக்கால் உன்னை வழிபடுகிறோம்.

இருவரும் : "தொடுக்கும் கடவுள் பழம்பாடல்

தொடையின் பயனே நறைபழுத்த துறைத்நீந் தமிழின் ஒழுகுநறும்

சுவையே அகந்தைக் கிழங்கையகழ்ந்

தெடுக்கும் தொழும்பர் உளக்கோயிற் கேற்றும் விளக்கே வளர்சிமய இமயப் பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே எறிதரங்கம்

உடுக்கும் புவனங் கடந்துநின்ற ஒருவன் திருவுள் ளத்திலழ கொழுக எழுதிப் பார்த்திருக்கும்

உயிரோ வியமே மதுகரம் வாய்

மடுக்கும் குழற்கா டேந்துமிள வஞ்சிக் கொடியே வருகவே! மலயத் துவசன் பெற்றபெரு வாழ்வே வருக! வருகவே!”

பொன் : கண்ணப்பா, அம்மை கோயில் கொண்ட இம் மண்டபத்திலேயுள்ள தூண்களைப் பார்த்தாயா? ஒன்றிலாவது எவர் சிலையாவது உள்ளதா? முகடும் தூணும் கலையால் அழகு செய்யப்பட்டுள்ளன! சிலையால் அழகு செய்யப்படாமை ஏன்? கல்லிலே மணி செய்து இங்குக் காட்டும் கலைவல்லான், என்ன எண்ணத்தால் இம் மண்டபத்தில் சிலைகளை நிறுத்தவில்லை? மணமேடையை அழகு செய்யாமல் மற்றை இடங்களை அழகு செய்வார் உண்டா?

கண்

பொன் :

இவள் அழகைப் பார்க்கவே ஈராயிரம் கண்கள் வேண்டியிருக்க இங்கே வேறு எவரழகைப் பார்க்க முடியும்?

66

“முடிகண்டார் முடியே கண்டார் முழுநலம் அருளிச் செய்யும் அடிகண்டார் அடியே கண்டார்”