104
இளங்குமரனார் தமிழ்வளம் - 33
தன்னை மறத்தலுக்கும்
தன்னையே மறத்தலுக்கும்தான்
எவ்வளவு வேற்றுமை?
தன்னையே நினைப்பான் உலகையா நினைப்பான்?
நாமன உழைப்போம்
மேசையின்மேலே மெழுகு வர்த்தியை
ஏற்றி வைக்கவும் ஒளிச்சுடர் பொழிந்தது: ஒளிச்சுடர் அறையை உயரிய நிலையில்
ஆட்சி கொண்டது: அப்பொழுது நினைத்தது மெழுகு:
"நானே உருகி நல்லொளி தந்தேன்"
திரியோ நினைத்தது: "நானே கருகிக் கவினொளி தந்தேன்'
தீயும் நினைத்தது: 'நானில்லை என்றால் மெழுகும் திரியும் ஒளியைத் தருமோ?
மூன்றும் முரணாய் நினைத்தன:
முட்டிக் கொண்டு வந்தது காற்று.
மோதித் தாக்கி மூன்றன் பெருமையும்
ஒன்றாய் ஒழியச் சுடரை அணைத்தது;
மூன்றும் ஒன்றாய்க் கேட்டன;
"நாங்கள் மூவரும் செருக்குடன் எண்ணிச்
சிறுதனம் ஆனது உண்மை; ஆனால்,
உன்னைப்போல அரக்கத்தனமாய்
அழித்திடவில்லை; அறிக. “காற்றுச் சொன்னது; தாக்குதல் நேர்ந்ததும் ஒன்றாய் நின்றீர்! தக்க பொழுதில் அதையேன் மறந்தீர்!
ஒருவர் செயலால் உலகம் இல்லை!