வானவில்
ஒவ்வொரு பேரும் ஒற்றுமையாக
உழைத்த போதுதான் உலகம் உய்யும்; இதோ:
அணைத்த நானே ஆவியைத் தருவேன்;
நானில்லை என்றால், தீயும் பற்றுமோ?
105
தீயில்லை என்றால், திரியும் எரியுமோ?
மெழுகும் உருகுமோ? சுடரும் பொழியுமோ?
ஆதலால், ஒன்றாய்க் கூடி உழைப்போம்;
உலகம் வாழ வாழ்வோம்! மூன்றும் மொழிந்தன:
"நல்லதே நவின்றாய் காற்றே!
நானெனல் ஒழிப்போம்: நாமென உழைப்போம்
நல்லறி வுரைத்த உனக்கெம் நன்றி!"
கூடும் குடும்பமும்
குத்துக்கல் மேலே குருவிகள் இரண்டு
குந்தி இருந்தன;
குருவிகள் இரண்டும் கூடு கட்டக்
கூடிப் பேசின:
புளிய மரத்தில் புதிய கூட்டைப்
புனைய விழைந்தது ஆண்:
தென்னை மரத்தில் தேர்ந்து கூட்டைக்
கட்டத் திரிந்தது பெண்:
புளியின் வலிமையைப் புகன்றது ஆண்;
தென்னையின் சிறப்பைத் தெளிவித்தது பெண்;
ஆணும் பெண்ணும் இசைந்தால் அன்றோ குடும்பம்? அசைந்து போனால் குடும்பம் ஆவதும் எப்படி?
ஆணின் உரையை அறவே மறுத்தது பெண்;
.
உண்மை உணர ஒருநாள் வருமென அமைந்தது ஆண்; தென்னை மரத்தில் கூடு கட்டத்