சிற்றருவி - குழந்தையர் பாடல்
33
இன்று வந்த தில்லை
நேற்று வந்த தில்லை
என்று வந்த தென்றே
எவரும் கண்டார் இல்லை - (எங்கள்)
புல்லைத் தின்னா மாடு
புனலைப் பருகா மாடு
நெல்லின் பயிரைக் கண்டும்
நேராய்ச் செல்லும் மாடு - (எங்கள்)
வாயும் வயிறும் இல்லை
வாலும் தலையும் இல்லை
ஏய கால்கள் இல்லை
எனினும் தாவி ஓடும் - (எங்கள்)
பெரிய மடியாய்த் தோன்றும்
பிறகு பிறகு தேயும்
உருவ மற்றும் போகும்
உடனே வளர்ந்தும் காணும் - (எங்கள்)
கொட்டும் பாலோ வெள்ளம்
கொள்ளை கொள்ளை வெள்ளம்
கட்டிக் காக்க ஆவல்
கையால் ஆக வில்லை - (எங்கள்)
குடத்தில் பிடித்துப் பார்த்தும்
கொஞ்சங் கூடக் காணோம்
தொடுத்துப் பிடித்துச் சேர்த்தும்
துளியும் நிற்க வில்லை - (எங்கள்)
கயிறு மத்துப் போட்டுக்
கடைந்தெ டுப்ப தெங்கே
தயிரும் மோரும் நெய்யும்
தாவிக் குடிப்ப தெங்கே - (எங்கள்)
மாடு நல்ல மாடு
மண்ணில் நடவா மாடு