2.
நோய்!
கணவன் இல்லை.
கைம்மை வாழ்வு.
ஆனால், ஆறு குழந்தைகளுக்குத் தாய்!
அவளே, குடும்பத்தின் காவல்!
அவளே, குடும்பத்தின் வருவாயும் வாழ்வும்!
நொந்தும் வெந்தும் வாழ்ந்த அவளுக்கு, வந்தது சிறுநீரக
ஒன்றுக்கு இரண்டு - சிறுநீரகமும் செயல்படவில்லை!
அடுத்து உதவுவார் ஒருவரும் இல்லை.
கொடுத்து வாங்கும் வாய்ப்பும் இல்லை.
என்ன செய்வாள் ஏழைத் தாய்?
வாழ வாய்ப்போ இல்லை!
வாழ வாய்த்தால், குழந்தைகளை வாழ வைக்கலாம்!
எவரோ தூண்ட ஏதோ ஓர் இதழில் அறிக்கை விடுத்தனள்;
.
குருதியின் இனம் 'பி +' ; "ஆறு குழந்தையர் வாழ்வை எண்ணி, அருளால் சிறுநீரகம் அளிப்பார் உண்டோ?" என்றது அறிக்கை.
அறிக்கை கிளர்ந்தது தில்லியில் இருந்து.
அறிக்கைப் பயன் கிளர்ந்தது பம்பாயில் இருந்து.
வேலை தேடும் இளைஞர்.
வேறு வகையும் இல்லா இளைஞர்.
"அறுவரைக் காக்க, அன்னையைக் காப்பேன்;"
என்னைப் பெற்றவர் என்றால் என்ன?