120
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
ச்செய்யுளில் ஊன்’
என் ற சொல்
உண்ணாமையுள்ளது என முதலிலும், 'ஊன் உண்ண பின்னரும் சென்றடைவதைக் காணலாம்.
‘தாய்' என்னுஞ் சொல்லிற்குச் சிறப்பு விதி : :
66
ஊன் எனப்
தாய் என்னுஞ் சொல் வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும்.
(எ.டு) தாய் + கை
=
தாய்கை
தாவண்ணம் :
இடையிட் டெதுகையான் வருவது தாவண்ணமாகும். தாவென்னும் உரிச்சொல் உணர்த்துங் குறிப்பு :
தாவென்னும் உரிச்சொல் வருத்தம் வலி குறிப்புகளையுணர்த்தும்.
(எ.டு) 'தாவினன் பொன்றைஇய பாவை
கருங்கட்டாக் கலை பெரும் பிறிதுற்றென
‘தாழ்’ என்பதற்குச் சிறப்பு விதி :
ஆகிய
தாழ் என்னுஞ் சொல்முன் கோல் என்னுஞ் வருமொழியாக வந்து பொருந்துமாயின் அகரச் சாரியை பெறும்.
(எ.டு) தாழ் + கோல் = தாழக்கோல்
தானியாகு பெயர் : :
தானத்தில் உள்ள பொருளின் பெயர் அதற்குத் தானமான பொருளுக்கு ஆகுவது தானியாகு பெயராம். (தானம்
—
-
இடம்)
(எ.டு) விளக்கு ஒடிந்தது என்றதில் விளக்கு என்னும் நெருப்புச் சுடரின் பெயர் அதற்கு இடமான தண்டுக்கு ஆயிற்று. திசைச் சொல் :
செந்தமிழ் நாடாகிய பாண்டிய நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகளிலும், பதினெட்டுத் தேயங்களுள் தமிழ்நாடு நீங்கிய பதினேழு நாடுகளிலும் வசிப்பவர்கள் தமது பேசும் மொழிகளிலுள்ள சொற்கள் அப்பொருளோடு செந்தமிழில் வந்து வழங்குவன திசைச் சொற்களாகும்.