146
(எ.டு)
இ.தெரி
உண்டனிர்
உண்டீர்
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
நி.தெரி
எ.தெரி
குறிப்பு
உண்கின்றனிர்
உ
உண்டிடீர்
குழையினிர்
உண்கின்றீர்
உண்பீர்
குழையீர்.
முன்னிலை வினை :
தன்மை படர்க்கை வினைகளுக்கு இனமாய், மூன்று காலத்திற்குந் தனித்தனி வருவதாய் ஏவற்பொருள் தோன்றாததாய் முன்னின்றானது தொழிலையுணர்த்தும் வினை முன்னிலை வினையாகும்.
(எ.டு) நடந்தாய், நடக்கின்றாய், நடப்பாய்.
முன்னிலை யொருமை வினை முற்று :
ஐ, ஆய், இ என்னும் விகுதிகளை இறுதியிலுடைய வினைச் சொற்களும், விகுதி பெறாமலும், பெற்றும் ஏவலில் வருகிற இருபத்து மூன்று ஈற்றுமொழிகளும், ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் என்னும் மூன்றுக்கும் பொதுவாகிய முன்னிலை யொருமைத் தெரிநிலைவினைமுற்றும் குறிப்பு வினைமுற்றும் ஆம்.
(எ-டு)
இ.தெரி
உண்டனை
நி.தெரி
உண்கின்றனை
எ.தெரி உண்பை
குறிப்பு
குழையினை
உ
உண்டாய்
உண்கின்றாய்
உண்பாய்
குழையாய்
உண்டி
உண்ணாநின்றி
சேறி
வில்லி
முன்னம் :
இவ்விடத்து இம்மொழியை இவர்க்குச் சொல்லத் தகுமெனக் குறித்து அவ்விடத்து அவர்க்கு அம்மொழியை உரைப்பது முன்னமாகும்.
மூவகைப் பெயர்க்கும் பொதுவான விளியுருபு :
விளிக்கப் படுகின்ற உயர்திணைப் பெயர், பொதுப் பெயர், அஃறிணைப்பெயர் ஆகிய மூவகைப் பெயர்களிடத்தும் இயல்பாதலும் ஏகாரம் மிகுதலும், இகரம் ஈகாரமாகத் திரிதலும் பெரும் பாலும் விளியுருபுகளாக வரும்.