பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இளங்குமரனார் தமிழ்வளம்

4

வழுக்கள் :

இருதிணையும், ஐம்பாலும், மூவிடமும், முக்காலமும் வினாவும், விடையும், பல்வகை மரபுகளும் ஆகிய ஏழும் தம் தம் முறையில் தவறிவந்தால் வழுவாகும்.

(எ.டு)

1.

அவன் வந்தது

திணைவழு

2.

அவன் வந்தாள்

பால்வழு

3. யான் வந்தான்

இடவழு

4.

நாளை வந்தான் காலவழு

5.

கறக்கிற எருமை பாலோசினையோ?

6.

வினாவழு

7.

பட்டுக்கோட்டைக்கு வழி எது என்றால் கொட்டைப்பாக்கு எட்டுப் பணம் என்பது விடைவழு

யானை செலுத்துபவனை இடையனென்பது

மரபுவழு-

வழுவமைதி :

இலக்கணக் குற்றமுள்ளதாகக்

முன்னோரால் ஏற்றுக் கொண்டு வழுவமைதியாம்.

காணப்பட்டாலும் அமைக்கப்பட்டன

வறிது என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்பு :

வறிது என்னும் உரிச்சொல் சிறிது என்னும் பண்பை யுணர்த்தும்.

(எ.டு) ‘வறிது வடக்கிறைஞ்சிய’

வறுமை என்னும் பண்பையுணர்த்தும் உரிச்சொற்கள் :

இலம்பாடும், ஒற்கமும், வறுமையாகிய

யுணர்த்தும் உரிச்சொற்களாகும்.

(எ.டு) 'இலம்படு புலவ ரேற்றகை நிறைய’

ஒக்க லொற்கஞ் சொலிய’

வாக்கியப் பொருளுணர்வுக்குக் காரணம் :

குறிப்பை

அவாய்நிலை, தகுதி, அண்மை, கருத்துணர்ச்சி ஆகிய நான்கும் வாக்கியத்தின் பொருளை உணர்தற்குக் காரணமாக

அமைவனவாம்.