சொல்
151
வாள் என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்பு :
வாள் என்னும் உரிச்சொல் ஒளி என்னும் பண்பை
யுணர்த்தும்.
(எ-டு)
வாண்(ள்)முகம்
வாழ்த்துதலாகிய குறிப்புணர்த்தும் உரிச்சொற்கள் :
பரவுதலும்,
பழிச்சுதலும்,
வாழ்த்துதலாகிய
குறிப்புணர்த்தும்.
(எ.டு) 'நெல்உகுத்துப் பரவுங் கடவுளு மிலவே'
‘கை தொழூஉப் பழிச்சி’
விடாதவாகு பெயர் :
கடுத்தின்றான், புளித்தின்றான் என்றவிடத்துக் கடுவும் புளியுஞ் சுவையாகிய தத்தம் பொருளைவிடாது நின்று தம் பொருளின் வேறல்லாத காய்கனி யென்னும் பொருளை உணர்த்தலால் விடாதவாகுபெயர்.
விடுதலாகிய குறிப்புணர்த்தும் உரிச்சொற்கள் :
தீர்தலும், தீர்த்தலும் ஆகிய இரண்டு உரிச்சொற்களும் விடுதலாகிய குறிப்புணர்த்தும் உரிச்சொற்களாகும்.
விடை :
66
(எ-டு)
""
துணையிற் றீர்ந்த கடுங்கண்யானை “நங்கையைச் செற்றந்தீர்த்துக் கொண்மீன்
வினாவிய பொருளை அறிவிப்பது விடையாகும். அது சுட்டு, எதிர்மறை, உடன்பாடு, ஏவல், வினாவெதிர் வினாதல், உற்றதுரைத்தல், உறுவது கூறல், இனமொழி என எட்டுவகைப் படும். இவற்றுள் முன்னையது மூன்றும் செவ்வனிறை; பின்னைய ஐந்தும் இறைபயப்பன. இறை = விடை.
(எ.டு)
வினா
விடை
1.
தில்லிக்குவழியாது?
2. இது செய்வாயா?
3. இது செய்வாயா?
இது-சுட்டு
செய்யேன்-எதிர்மறை
செய்வேன்-உடன்பாடு