(எ.டு)
66
புறப்பொருள்
'கல்லெனீர் வேலிக் கணவன் கழல்வாழ்த்தி
ஒல்லும் வகையால் விருந்தோம்பிச்- செல்லுந்தம் இற்செல்வம் அன்றி இரந்தவர்க் கீகல்லாப்
புற்செல்வம் பூவா புகழ்.
உட்கோள்: -(அ)
235
வண்டு பொருந்திய மயிரினை யுடைய தலைவனை விரும் பிய தலைவி, அத்தலைவனைக் கூடக் கருதியது உட்கோள் என்னும் துறையாம்.
(எ.டு)
“உள்ளம் உருக ஒளிவளையும் கைநில்லா
கள்ளவிழ் தாரானும் கைக்கிணையான்-எள்ளிச் சிறுபுன் மாலை தலைவரின்
உறுதுயர் அவலத் துயலோ அரிதே."
உட்கோள்: -(ஆ)
தலைவி என் நெஞ்சிலே வீற்றிருந்தும், எனது விருப்பத்தின் பெருமையை உணர்ந்திலள் என்று தலைவன் தன் உள்ளத்திலே கருதியது உட்கோள் என்னும் துறையாம்.
(எ.டு)
66
'கவ்வை பெருகக் கரந்தென் மனத்திருந்தும்
செவ்வாய்ப் பெருந்தோள் திருநுதலாள்-அவ்வாயில்
அஞ்சொல் மாரிபெய் தவியாள்
நெஞ்சம் பொத்தி நிறைசுடும் நெருப்பே.”
உரைகேட்டு நயத்தல்:
காமத்துன்பத்தில் அழுந்தியிருந்த தலைவி தலைவனது மொழி கேட்டு விரும்பியது, உரைகேட்டு நயத்தல் என்னும் துறையாம்.
(எ.டு)
66
'ஆழ விடுமோ அலரொடு வைகினும்
தாழ்குரல் ஏனல் தலைக்கொண்ட-தூழில்