238
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
ஊரின்கண் தோன்றிய காமப் பகுதி:
காதல் மிக்க ஆடவரும் மகளிரும் அழகு பொருந்தக் கூடும் ஊரைப் பாராட்டியது ஊரின் கண் தோன்றிய காமப் பகுதி என்னும் துறையாம்.
(எ.டு)
“ஊடிய ஊடல் அகல உளநெகிழ்ந்து
வாடிய மென்தோள் வளையொலிப்பக்- கூடியபின்
யாமநீ டாகென்ன யாழ்மொழியார் கைதொழூஉம் ஏமநீர்க் கச்சியெம் ஊர்.
ஊர்கொலை:
வெட்சி மறவர்கள் பகைவர் ஊரின்கண் தீ தவழும்படி தம்குதிரைகளை முடுக்கிப் பகைவரது அரண்களை அழித்தது, ஊர் கொலை என்னுந்துறையாம்.
(எ.டு)
“இகலே துணையா எரிதவழச் சீறிப் புகலே அரிதென்னார் புக்குப்- பகலே தொலைவிலார் வீழத் தொடுகழல் ஆர்ப்பக் கொலைவிலார் கொண்டார் குறும்பு.
ஊர்ச்செரு:
وو
உழிஞை மறவரால் புகுதற்கரிய காவற் காட்டோடு அகழியும் அப்பகைவரால் சிதைவுறாதபடி நொச்சி மறவர் போர் செய்த மாண்பினைச் சொல்லியது ஊர்ச் செரு என்னும் துறையாம்
(எ.டு)
"வளையும் வயிரும் ஒலிப்பவாள் வீசி இளையும் கிடங்கும் சிதையத்-தளைபரிந்த நோனார் படையிரிய நொச்சி விறல்மறவர் ஆனார் அமர்விலக்கி ஆர்ப்பு."
எயில்தனை யழித்தல்:
மதிலைக் காவல் செய்த நொச்சி மறவரது அழிவைக் கூறியது எயில்தனை யழித்தல் என்னுந்துறையாம்.