(எ.டு)
புறப்பொருள்
“கற்பொறியும் பாம்பும் கனலும் கடிகுரங்கும் விற்பொறியும் வேலும் விலக்கவும்- பொற்புடைய பாணி நடைப்புரவிப் பல்களிற்றார் சாத்தினார் ஏணி பலவும் எயில்.
ஏணிமிசை மயக்கம்:
241
மதிலின் மீது நன்கு பொருந்துமாறு அமைந்த ஏணியின் மீது ஏறி நின்று மதிலின் அகத்தோனும் புறத்தோனும் போர் செய்தல் ஏணி மிசை மயக்கம் என்னுந்துறையாம்
(எ.டு)
“பொருவரு மூதூரிற் போர்வேட் டொருவர்க் கொரு வருடன்றெழுந்த காலை-யிருவரு மண்ணொடு சார்த்தி மதில் சார்த்திய யேணி விண்ணொடு சார்த்தி விடும்"
ஏழகநிலை: -அ
எம் வேந்தன் ஆட்டுக்கடாமேல் ஏறி ஊர்ந்து விளையாடும் இளைஞனாயிருப்பினும் அரசாட்சித் துறையில் பெரியன் என்று ஓர் இள மன்னனின் சிறப்பைப் பாராட்டுவது ஏழக நிலை என்னும் துறையாம்(ஏழகம்=ஆடு)
(எ.டு)
“எம்மனை யாம் மகிழ ஏழகம் மேற்கொளினும் தம்மதில் தாழ்வீழ்த் திருக்குமே- தெம்முனையுள் மானொடு தோன்றி மறலுங்கால் ஏழகத் தானொடு நேராம் அரசு
ஏழகநிலை: -(ஆ)
99
புகழ் பொருந்திய உலகத்தின் கண் ஒரு மன்னன் தனது இளமையை எண்ணாமல் அரசுரிமை மேற்கொண்டு நடத்தலும் ஏழகநிலை என்னும் துறையாம்.
(6.6)
"வேண்டார் பெரியர் விறல்வேலோன் தானிளையன்
பூண்டான் பொழில்காவல் என்றுரையாம்-ஈண்டு