244
(எ.டு)
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
"நல்கெனின் நாமிசையாள் நோமென்னும் சேவடிமேல் ஒல்கெனின் உச்சியாள் நோமென்னும்-மல்கிருள்
ஆடல் அமர்ந்தாற் கரிதால் உமையாளை
ஊடல் உணர்த்துவதோர் ஆறு.
கடவுள் வாழ்த்து:
وو
உலகங் காக்கும் தொழிலைக் கைக் கொண்ட மன்னவன் கை கூப்பி வணங்குகின்ற அரி, அரன், அயன் என்ற மூவரில் ஒரு வுளை விதந்து கூறுவது கடவுள் வாழ்த்து என்னும் துறையாம்.
கட
(எ.டு)
66
வைய மகளை அடிப்படுத்தாய் வையகத்தார்
உய்ய உருவம் வெளிப்படுத்தாய்-வெய்ய அடுந்திறல் ஆழி அரவணையாய் என்றும் நெடுந்தகை நின்னையே யாம்.'
கடைநிலை:
வ
தொலைவிலிருந்து வருகின்ற வருத்தம் நீங்கும் பொருட்டு வாயில் காத்து நிற்போர்க்கு உரைப்பது கடை நிலையாகும். (எ.டு)
“வேற்றுச் சுரத்தொடு வேந்தர்கண் வெம்மையு மாற்றற்கு வந்தனேம் வாயிலோய்-வேற்றார் திறைமயக்கு முற்றத்துச் சேணோங்கு கோயி லிறைமகற்கெம் மாற்ற மிசை”
கட்காஞ்சி:
வ
காஞ்சி மன்னன் தன் வீரர்கட்குக் கள் வழங்கியது கட்காஞ்சி என்னும் துறையாம்.
(6.6)
66
‘ஒன்னா முனையோர்க்கு ஒழிக இனித்துயில்
மன்னன் மறவர் மகிழ்தூங்கா-முன்னே
படலைக் குரம்பைப் பழங்கண் முதியாள்
விடலைக்கு வெங்கள் விடும்.