254
இளங்குமரனார் தமிழ்வளம்
காண்டல் வலித்தல்:
―
4
யுடைய
காமம் வருத்தலால் மெலிந்து வருந்தும் தலைவி தலைவனைக் கூடுதல் நிமித்தமாக மலை நாட்டையுடை தலைவனை இரண்டாவது முறையும் காண்பதற்கு உறுதி பூண்டது காண்டல் வலித்தல் என்னும் துறையாம்.
(எ.டு)
“வேட்டவை எய்தி விழைவொழிதல் பொய்போலும்
மீட்டு மிடை மணிப் பூணானைக்-காட்டென்று
மாமை பொன்னிறம் பசப்பத்
தூமலர் நெடுங்கண் துயில்துறந் தனவே.'
காண்டல்:
அழகிய நெற்றியையும் மூங்கிலைப் போன்ற தோளினையும் உடைய ஒருதலைவி ஒரு தலைவனைக் கண்டு காமுற்று மெலிந்தது காண்டல் என்னும் துறையாம்.
(எ.டு)
66
கடை நின்று காமம் நலியக் கலங்கி இடை நின்ற ஊரலர் தூற்றப்-புடைநின்ற எற்கண் டிலனந் நெடுந்தகை
தற்கண்ட னென்யான் கண்ட வாறே.
காதலிற் களித்தல்:
99
தலைவி, மலை நாட்டையுடைய தலைவனது மார்பினைத் தழுவி நீங்குதல் அறியாத காமத்தாலே மகிழ்ந்தது காதலிற் களித்தல் என்னும் துறையாம்
(எ.டு)
“காதல் பெருகிக் களிசெய்ய அக்களியாற் கோதையும் தாரும் இடைகுழைய-மாதர்
கலந்தாள் கலந்து கடைக் கண்ணாற் கங்குல்
புலந்தாள் புலரியம் போது.
காந்தள்:
முருகப் பெருமான் சூரன்பன்மாவை அழிக்கும் பொருட்டுச் சூடிய காந்தளின் சிறப்பைக் கூறியது காந்தள் என்னும் துறையாம்.