புறப்பொருள்
செயிர்காவல் பூண்டொழுகுஞ் செங்கோலார் செல்வம் உயிர்காவல் என்னும் உரை.
தானைமறம்: (ஆ)
99
அரசனுக்கு உறுதி கூறிப் போர் தானைமறம் என்னும் துறையாம்.
(எ.டு)
“வயிர்மேல் வளைஞரல வைவேலும் வாளும் செயிர்மேற் கனவிழிப்பக் சீறி-உயிர்மேற் பலகழியு மேனும் பரிமான்தேர் மன்னர்க்கு உலகழியும் ஓர்த்துச் செயின்.'
தானைமறம்: (இ)
277
செய்வித்தலும்
தும்பை யரசனது வேற்படையின் வன்மையை விதந்து சொல்லிப்பகைவரது அழிவிற்கு இரங்குதலும் தானைமறம் என் னும் துறையாம்.
(எ.டு)
"மின்னார் சினஞ்சொரிவேல் மீளிக் கடற்றானை ஒன்னார் நடுங்க உலாய்நிமிரின்-என்னாங்கொல் ஆழித்தேர் வெல்புரவி அண்ணல் மதயானைப் பாழித்தோள் மன்னர் படை.
திறை கொண்டு பெயர்தல்:
உழிஞையரசன் நொச்சியான் பணிந்து கொடுத்த திறைப் பொருளைப் பெற்று மீளுதல் திறை கொண்டு பெயர்தல் என்னும் துறையாம்.
(எ.டு)
"கோடும் வயிரும் இசைப்பக் குழுமிளை
ஓடெரி வேய உடன்றுலாய்ப்-பாடி
உயர்ந்தோங் கரணகத் தொன்னார் பணியப்
பெயர்ந்தான் பெருந்தகையி னான்.