புறப்பொருள்
வாயுறை வாழ்த்துப் பாடுவதற்குரிய பாடல்:
337
வாயுறை வாழ்த்து, அவையடக்கியல், செவியறிவுறுத்தற் பொருள் ஆகியவை கலிப்பா, வஞ்சிப்பா ஆகியவற்றில் வாரா. ஆசிரியப்பா, வெண்பா ஆகிய இரண்டினும் வரும்.
வாராமைக்கு அழிதல்:
தீ
தீ நிமித்தம் கண்ட தலைவி தலைவன் வாரான் எனக்கருதி வருந்தியது வாராமைக்கு அழிதல் என்னும் துறையாம்.
(எ.டு)
“நுடங்கருவி ஆர்த்திழியும் நோக்கருஞ் சாரல்
இடங்கழி மால்மாலை எல்லைத்- தடம் பெருங்கண் தாரார மார்பன் தமியேன் உயிர்தளர
வாரான்கொல் ஆடும் வலம்.’
வாழ்க்கை புல்லா வல்லாண் பக்கம்:
பொருந்தாத வாழ்க்கையினையுடைய வலிய ஆண்மை யினைப் பொருந்தும் பகுதியாம்.
(எ.டு)
66
'கலிவர லூழியின் வாழ்க்கை கடிந்து
மலிபுகழ் வேண்டு மனத்த- ரொலிகடல்சூழ்
மண்ணகலம் வேண்டாது வான்வேண்டி யீண்டினார்
புண்ணகலாப் போர்க்களத்துப் போந்து”
வாழ்த்து:
நடுகல் நட்டபின் கோயிலாக அமைத்து அதில் அவன் பீடும் பெயருந் தீட்டி அக்கல்லினைத் தெய்வமாக்கி வாழ்த்துதல் வாழ்த்து என்னுந்துறையாம்.
(எ.டு)
"ஆவாழ் குழக்கன்றுய் வித்துக் களத்தவிந்த நீவாழ வாழிய நின்னடுக- லோவாத
விற்கோட்ட நீண்டதோள் வேந்தன் புலிபுறித்த பொற்கோட் டிமயமே போன்று”