வேள்விநிலை:
புறப்பொருள்
347
முடிவில்லாத புகழையுடைய மன்னன் தேவர்களும் மனம் மகிழும்படி அறக்களவேள்வி
வேள்விநிலை என்னும் துறையாம்.
(எ.டு)
சய்த சிறப்புரைத்தது
“கேள்வி மறையோர் கிளைமகிழ்தல் என் வியப்பாம் வேள்வி விறல்வேந்தன் தான்வேட்ப- நீள்விசும்பின் ஈர்ந்தார் இமையோரும் எய்தி அழல்வாயால் ஆர்ந்தார் முறையால் அவி.
வெறியாட்டு:
ய
மறக்குடி மகளிர் தம்முடைய கணவர் மேற்கொண்ட தொழில் நன்றாக முடியும் பொருட்டு, வேலனொடு வள்ளிக் கூத்தை ஆடியது வெறியாட்டு என்னும் துறையாம்.
(எ.டு)
“காணில் அரனுங் களிக்குங் கழன்மறவன்
பூணிலங்கு மென்முலைப் போதரிக்கண்- வாணுதல்
தான்முருகு மெய்ந்நிறீஇத் தாமம் புறந்திளைப்ப
வேன்முருகற் காடும் வெறி.
வேற்றுப்படை வரவு:
உழிஞை மன்னன் மதில் முற்றுகையை விட்டு நீங்குமாறு வேற்றரசன் நொச்சி மன்னனுக்குத் துணையாக வந்தது வேற்றுப் படை வரவு என்னும் துறையாம்.
(எ.டு)
“உவனின் றுறுதுயரம் உய்யாமை நோக்கி அவனென் றுலகேத்தும் ஆண்மை- இவனன்றி மற்றியார் செய்வார் மழைதுஞ்சு நீளரணம் முற்றியார் முற்று விட.
வேற்றொழில் வன்மை:
போர்க் கணன்றியும் பெரியோராகிய பகைவரை அத் தொழிற் சிறப்பான் அஞ்ச வைப்பதும் வேற்றொழில் வன்மை யாகும்.