430
இளங்குமரனார் தமிழ்வளம் 4
―
மடுத்ததைந்த தாமரைநின் வாண்முகத்திற் கொப்பென் றெடுத்தியம்ப வேண்டுகின்ற தின்று”
யைபுருவக அணி
இது உருவக அணி வகைகளுள் ஒன்று. இது தொடர்பினுள் பல பொருளையும் உருவகஞ் செய்யுங்கால் தம்முள் காரணகாரிய மியைபுடைத்தாக வைத்து உருவகஞ் செய்து பாடுவதாம்.
எடு :-
“செவ்வாய்த் தளிரு நகைமுகிழுங் கண்மலரும் மைவா ரளக மதுகரமும் - செவ்வி
உடைத்தாந் திருமுகமென் னுள்ளத்து வைத்தார் துடைத்தாரே யன்றோ துயர்
இயைபிலுருவக அணி
இது உருவக அணி வகைகளுள் ஒன்று. பலபொருள்களை உருவகஞ்செய்யுங்கால் அப்பொருள்கள் தம்முள் பொருந் தாமையை வைத்து உருவகஞ் செய்து பாடுவது இயைபிலுருவக அணியாம்.
எடு :
"தேனக் கலர்கொன்றை பொன்னாகச் செஞ்சடையே
கூனற் பவளக் கொடியாகத் - தான மழையாகக் கோடு மதியாகத் தோன்றும் புழையார் தடக்கைப் பொருப்பு’
இயைபின்மையணி
ஒரு வாக்கியத்துள் ஒரு பொருளையே உபமானமாகவும் உபமேயமாகவுஞ் சொல்லுதலாம். இதனை வடநூலார் ‘அநந் வயாலங்கார'மென்பர்; தண்டியாசிரியர் ‘பொதுநீங்குவமை'
யென்பார்.
எடு :-
தேனே யனையமொழிச் சேயிழையாள் செவ்வியினால்
தானே உவமை தனக்கு.
இரங்கல் விலக்கு
இரங்கல் தோன்றக் கூறிவிலக்குவது இரங்கல் விலக்கு
என்னும் அணியாம்.
>