அணி
441
உள்ளத னபாவம்
இதுவும் அபாவ வேதுவின் பாற்படும். ஓரிடத்தும் ஒரு காலத்தும் உள்ள பொருள் பிறிதோரிடத்தும் பிறிதொரு காலத்தும் இல்லாமையைக் கூறுவதாம்.
எடு :-
66
'கரவொடு நின்றார் கடிமனையிற் கையேற் றிரவொடு நிற்பித்த தெம்மை – அரவொடு
மோட்டாமை பூண்ட முதல்வனை முன்வணங்க மாட்டாமை பூண்ட மனம்'
உறுப்புக்குறை விசேடம்
இதுவும் விசேட வணிவகைகளுள் ஒன்று. கருவிகளுள் குறைவு தோன்றக் கூறிய காரியத்தில் உயர்வுதோன்றக் கூறுவது உறுப்புக்குறை விசேடம் என்னும் அணியாம்.
எடு :-
66
“யானை யிரதம் பரியா ளிவையில்லை
தானு மனங்கன் றனுக்கரும்பு - தேனார் மலரைந்தி னால்வென் றடிப்படுத்தான் மாரன் உலகங்கண் மூன்று மொருங்கு.'
இதில், கருவிகளிற் குறை கூறிக் காரியத்தில் உயர்வு தோன்றச் சொன்னமையால் உறுப்புக்குறை விசேடம் பொருந்தி யிருத்தல் காண்க.
உறழ்ச்சி யணி
ஒத்த வலிமையுள்ள இருபொருள்களுக்குப் பகைமை தோன்றக் கூறுவது உறழ்ச்சியணியாகும்.
எடு :-
தலையையே னும்விரைந்தெந் தார்வேந்தர்க் கோர்நின் சிலையையே னும்வளைத்தல் செய்.
உறுசுவையணி
உலகத்திலுள்ள பலபண்பு டை டய க சுவையாகியவற்றை யொன்றினுக் கொன்று உயர்வுடையனவாக எண்ணி, இறுதியில் ஒரு சிறந்த சுவையை யெண்ணிய யாவையினும் மிகுந்த சுவை