இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
448
எடு :-
66
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
'கூர்கொண்டு வேலுடைநங் கோன்கடைக்கண், பார்வையே சீர் கொள்கவி வாணர் திரு.
ஏதுவுருவகம்
எடு :-
66
وو
காரணத்தோடு கூடிவரும் உருவகம் ஏதுவுருவகமாகும்.
“மாற்றத்தாற் கிள்ளை நடையாண் மடவன்னம்.’
இங்கே, கிள்ளை முதலிய உருவகம் மாற்றம் முதலிய ஏது வோடு கூடி வந்தவாறு அறிக.
ஐயவணி
ஒன்றினை, இதுவோ, அதுவோ, மற்றொன்றோ என்று ஐயமுறக் கூறுதல் ஐயவணியாம்.
எடு :-
66
'அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கணங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.
ஐயவுவமை
உவமையையும்
இஃது உவமை வகைகளுள் ஒன்று. பொருளையும் ஐயுற்று உரைப்பது ஐயவுவமையாகும்.
எடு :-
“தாதளவி வண்டு தடுமாறுந் தாமரைகொல்
மாதர் விழியுலவு வாண்முகங் கொல் - யாதென்
றிருபாற் கவர்வுற் றிடையூச லாடி
ஒருபாற் படாதென் னுளம்.”
ஐய விலக்கு
ஐயுற்றதனைக் கூறிக் குறிப்பினால் விலக்குவது ஐயவிலக்கு
என்னும் அணியாம்.