456
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
இதில், அமிர்தமென்னப்பட்ட உவமானத்தினால் சொல்லில் இருக்கின்ற இனிமையாகிய உவமேயஞ் சொல்லப்பட்டுச் நிலவினிடத்து இல்லையென்பதால் ஒழிப்பை உட்கொண்டி ருக்கிறது.
ஒன்றினொன்றபாவம்
இதுவும் அபாவ வேதுவின் பாற்படும். ஒன்றினிடத்து ஒன்றினது இல்லாமையைக் கூறுவதாம்.
எடு :-
“பொய்ம்மை யுடன்புணரார் மேலானார் பொய்ம்மையு மெய்ம்மைசூழ் மேலாரை மேவாவாம் - இம்முறையாற் பூவலர்ந்த தாரார் பிரிந்தாற் பொலங்குழையார் காவலர்சொற் போற்றல் கடன்.
ஒன்றற் கொன்று உதவியணி
ஒன்றற்கொன்று உதவி செய்தலைக் கூறுவதாம். இதனை வடநூலார் ‘அந்நியோந்நியலங்கார’ மென்பர்.
எடு :-
66
'திங்களிர வால்விளங்குஞ் செப்புகதிர்த் திங்களால் கங்குல் விளங்குமே காண்.'
ஒட்டியம்
99
உதடும் உதடும் குவிந்தும் கூடியும் நடைபெறும் எழுத்துக் களால் வரத் தொடுப்பது ஓட்டியம் என்னும் அணியாம். எடு
66
குருகு குருகு குருகொடு கூடு
குருகுகுரு கூருளுறு கோ.
இஃது இதழ்குவிந்த வோட்டியம். (இதன் பொருள்)
மனனே! சங்குசங்கொடுங் குருகென்ற பறவைகள் குருகு களோடுங் திரண்டியங்குங்குருகாபுரியுட் கோவை நினை.
“பம்மும்பம் மும்பம்மு மம்மம்ம மை மாமை
பம்முமம்ம மும்மேமம் பாம்.
இஃது இதழியைந்த வோட்டியம்.