476
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
கொடைவீர மோமெய்ந் நிறைகுறையா வன்கட் படைவீர மோசென்னி பண்பு
சுருங்கச் சொல்லலணி
அடைமொழியின் ஒப்புமையாற்றலால் அல்பொருட்
செய்தி தோன்றப் புகழ் பொருட் செய்தியைச் சொல்லுவது சுருங்கச் சால்லலணியாம்.
தனை வடநுலார்
சமா
சோக்தியாலங்கார’ மென்பர்.
எடு :-
“கொந்தார் குழல்சரியக் கோல முகம்வியர்ப்பச் சந்தார் திதலைத் தனமசையப் - பந்தேநீ
சிற்றிடையா ளார்வமொடு தீண்டிவிளை யாடுதற்கு நற்றவமென் செய்தாய் நவில்.
இதில், பந்தின் செயல் வருணிக்கப்பட்டுக் கொண்டிருக்க மாறாம் புணர்ச்சியில் இச்சையுடைய நாயகன் செயல் தோன்றிற்று. செம்மொழிச் சிலேடை
சொல் நின்ற நிலை குலையாமல் ஒரே சொல் பலபொருள் தந்து நிற்பது செம்மொழிச்சிலேடை என்னும் அணியாம். எடு :-
"செங்கரங்க ளானிரவு நீக்குந் திறம்புரிந்து பங்கய மாதர் நலம்பயிலப் - பொங்குதயத் தோராழி வெய்யோ னுயர்ந்த நெறியொழுகும் நீராழி நீணிலத்து மேல்.
وو
இஃது ஆதித்தனுக்குஞ் சோழனுக்குஞ்சிலேடை.
சொற்பின் வருநிலையணி
ஒரு செய்யுளுள், முன்னர் வந்த சொல்லே பின்னர்ப் பல விடத்தும் வந்து, அச்சொற்குப் பொருள் வேறாயின் அது சொற்பின்வருநிலையணியாம்.
எடு :-
“மால்கரி காத்தளித்த மாலுடைய மாலைசூழ்
மால்வரைத்தோ ளாதரித்த மாலையார் - மாலிருள்சூழ்