எடு :-
66
அணி
519
சந்தமிலா வாயுறினுஞ் சந்தம் உடையனவே கொந்தவிழ்தார்ப் பாவை குயம்.”
இதில், சந்தமில்லனவற்றைச்
மென்னும் பகைமை அழகுடை
அழிந்தது.
சந்தமுடையனவேயா ா
அழகுடையன என்னும் பொருளால்
முரண்வினைச்சிலேடை
தொடர்ந்து நின்ற சொற்கள் வெவ்வேறு வகையாகப் பிரிக்கப்பட்டு பலபொருள் தந்த மாறுபட்ட வினையான் முடிவது முரண் வினைச் சிலேடையாகும். முரண் - மாறுபாடு. எடு :-
66
'மாலை மருவி மதிதிரிய மாமணஞ்செய்
காலைத் துணைமேவ லார்கடிய - வேலைமிசை மிக்கார் கலியடங்கா தார்க்கும் வியன் பொழில்கள் புக்கார் கலியடங்கும் புள்.
இது பிரிந்தார்க்கும் புணர்ந்தார்க்குஞ்சிலேடை. பிரிந்தார்மேற் செல்லுங்கால்
மாலை - மயக்கம். மதி - கருத்து. திரிதல் - வேறுபடுதல். மணம் வாசம். துணை மேவலார் தம் துணைவரைப் பிரிந்தார். கடிய - அஞ்ச.
-
புணர்ந்தார் மேற்செல்லுங்கால்
-
மாலை - அந்திப் பொழுது. மதி - திங்கள். திரிதல் - உலாவல். மணம் - கூட்டம். துணைமேவலார் - துணைவரைப் பிரிந்தார். கடிய - விளங்க.
இங்கு அடங்காது ஆர்க்கும், ஆர்கலி அடங்கும் என வந்த வினைகள் ஒன்றற் கொன்று முரணாகுமாறு காண்க.
முழுவதுஞ் சேறல்
இது வேற்றுப் பொருள் வைப்பணியின் வகைகளுள் ஒன்று. ஒருதிறம் உரைத்தால் அத்திறம் எல்லாவற்றின் மேலும் முற்றச் செல்லவுரைப்பதாம்.