அணி
535
காவல னென் றோங்கு கடை காப்பவராற் றள்ளுணமிப் பாவலரைப் பொன்னேகண் பார்.’
வீறுகோளணி
செல்வ மிகுதியை யேனும், புகழத்தக்க ஒரு வரலாற்றைப் புகழ் பொருளுக்கு அங்கமாக வேனும் பாடுதலாம். இதனைவட நூலார் ‘உதாத்தாலங்கார’ மென்பர்.
எடு :-
“மணிப்பொற் குழைகொண்டு கோழி யெறிவாழ்க்கை அணிப்பொற் கொடிகாண் அவள்.”
இது செல்வ மிகுதி.
“உமையாள் அருந்தவஞ்செய் ஒண்கச்சி யூரே
எமையாள் பரமற் கிடம்.”
இது புகழ் பொருளுக்கு அங்கம்.
வெகுளிவிலக்கு :
கோவம் தோன்றக் கூறி விலக்குவது வெகுளிவிலக்கு என்னும் அணியாம்.
எடு :-
66
'வண்ணங் கருக வளைசரிய வாய்புலர
எண்ணந் தளர்வே மெதிர்நின்று - கண்ணின்றிப்
போதல் புரிந்து பொருட்காதல் செய்வீரால் யாதும் பயமிலமே யாம்.
ங்கே, தலைவன் பிரிவின் வண்ணங்கருகுதல் முதலிய நிகழ எதிர் நின்று “யாதும் பயமிலமே யாம்” என்றதனால் வெகுளி தோன்றக் கூறிச் செலவை விலக்கியவாறு அறிக.
வெளிப்படை நவிற்சியணி :
அஃதாவது, சிலேடையான் மறைத்த பொருளைப் புலவன் வெளிப்படுத்தலாம். இதனை வடநூலார் 'விவ்ருதோக்திய ப லங்கார' மென்பர்.