536
எடு :-
66
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
பிறன்புலத்தில் வாய்நயச் சொல்பெட்புடன் கொள்காளாய் இறைவனடை கின்றனன் விட்டேகு - துறையி னெனப் பண்பி னுணரப் பகர்ந்தான் குறிப்பாக
நண்பினுயர் பாங்க னயந்து.’
வெற்றொழிப்பணி
இவ்வணி ஒழிப்பணிவகைகளுள் ஒன்று. உவமானத்தின் தன்மையை விளக்குதற் பொருட்டு உவமேயத்தின் தன்மையை ஒழித்தலாம்.
எடு :-
“மதியன் றிதுபுகலின் வானதியிற் றோன்றும்
புதியதொரு வெண்கமலப் பூ.
வேண்டலணி
குற்றத்தாற் குண முண்டாதலைக் கண்டு அக்குற்றத்தை வேண்டுதலாம். இதனை வடநூலார் ‘அநுக்ங்யாலங்கார’ மென்பர்.
எடு :-
"வெண்டிரு நீறு புனையுமா தவர்க்கு
விருந்து செய் துறுபெரு மிடியும்
கொண்டநல் விரதத் திளைக்கும்யாக் கையுநீ
கொடியனேற் கருளுநா ளுளதோ.
வேறுபாட்டொழிப் பணி
| 2
இதுவும் ஒழிப்பணி வகைகளுள் ஒன்று உவமேயத்தில்
மிகுத்தற் பொருட்டு மற்றொரு பொருளின் வினையை ஒழிப்ப
தாம்.
எடு :-
“தெரியு மிதுதிங்க என்று செழும்பூண்
அரிவைமுக மேதிங்க ளாம்.
இதில், திங்களின் வினை அதனிடத்து ஒழிக்கப்பட்டு உவமேயமாகிய முகத்தில் கூறப்பட்டது.