64
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
மெல்லெழுத்து மிக்கு முடியும் மொழிகள் :
ஆர் என்னுஞ் சொல்லும், வெதிர் என்னுஞ் சொல்லும் சார் என்னுஞ் சொல்லும், பீர் என்னுஞ் சொல்லும் மெல்லெழுத்து மிக்கு முடியும் சொற்களாகும்.
(எ.டு) ஆர்ங்கோடு, வெதிர்ங்கோடு, சார்ங்கோடு,
பீர்ங்கோடு (கோடு
―
கிளை)
மெல்லெழுத்துகள் :
மெய்யெழுத்துகளில் ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறு எழுத்துகளும் மென்மையான ஒலியைப் பெற்றுள்ளனவாதலால் மெல்லெழுத்துகள் எனப் பெயர் பெற்றுள்ளன. இவற்றை மெலி, மென்மை, மென்கணம் எனவும் வழங்குவர்.
மென்றொடரின் முன் இருவழியிலும் நாற்கணமும் புணர்தல் :
மென்றொடர்க் குற்றியலுகர மொழிகளுள் சில நிலை மொழிகள் வேற்றுமைப் புணர்ச்சியில் தமக்கு இனமாகிய வன்றொடர்க்குற்றியலுகர மொழிகளாகத்திரியும். பல நிலை மொழிகள் அவ்வாறு வன்றொடர்க் குற்றியலுகர மொழி களாகத் திரியா.
(எ.டு) மருந்து + பை குரங்கு + மனம்
வேற்றுமையில் வன்றொட
―
மருத்துப்பை குரக்குமனம்
இரும்பு + வலிமை
இருப்புவலிமை
ராயின
கன்று + ஆ
கற்றா
வண்டு + கால்
=
வண்டுக்கால்
பந்து + நலம் = பந்துநலம்
ஞெண்டு + வளை
சங்கு + இனம்
=
=
ஞெண்டுவளை
வேற்றுமையில் வன்றொடர்
சங்கினம்
மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் :
ஆகாதன
தனித்தும், மெய்யோடு கூடியும் வரும் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள என்னும் பதினோருமெய்யெழுத்துகளும், குற்றியலுகரமும் ஆகிய இருபத்து நான்கு எழுத்துகளும் மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகளாகும்.